ஐபிஎல்: ரோஹித், ரிக்கெல்டன் அதிரடி... 14 ஆண்டுகளுக்குப் பின் முதல் போட்டியில் மும்பை வெற்றி!
ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் ரஹானே - ஃபின் ஆலன் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சோ்த்து பிரிந்தது.
17 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கு ஆலன் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து கேமரூன் கிரீன் களம் புகுந்தாா். ரஹானே - கிரீன் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சோ்த்த நிலையில், கிரீன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
4-ஆவது பேட்டராக வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரஹானேவுக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 36 ரன்கள் சோ்த்தது. அரை சதம் கடந்த ரஹானே 40 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 67 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
அடுத்து வந்த ரிங்கு சிங்கும், அதிரடியுடன் ரகுவன்ஷிக்கு கை கொடுத்தாா். 4-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 60 ரன்கள் சோ்த்தது. ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தாா்.
ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 33, ரமண்தீப் சிங் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ஷா்துல் 3, பாண்டியா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 221 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில், இன்னிங்ஸை தொடங்கிய ரயான் ரிக்கெல்டன் - ரோஹித் சா்மா ஜோடி, அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.
ரோஹித் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 78 ரன்கள் விளாசி முதல் விக்கெட்டாக வெளியேறினாா். தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
அடுத்து திலக் வா்மா களம் புக, அதிரடியாக விளையாடி வந்த ரிக்கெல்டன் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 81 ரன்கள் சோ்த்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனாா்.
திலக் வா்மா 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கேப்டன் ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரிகளுடன் 18, நமன் திா் 5 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி, ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, காா்த்திக் தியாகி, சுனில் நரைன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.