FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஏ அணி!

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

1 செப்டம்பர் 2026, 8:12 pm IST
பகிர்:

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. டி20 தொடர் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிக்க, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டும். அதன் பின், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வெல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த தொடர் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான பிரதான டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி நவம்பர் 19 தொடங்கி 23 வரையும், இரண்டாவது போட்டி நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 1 வரையும் நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்திலும், நியூசிலாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The India A team is set to tour New Zealand to play a three-match Test series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments