டாடா ஓபன் டென்னிஸ்: போபண்ணா- டிவிஜ் சரண் இணை பங்கேற்பு
டாடா ஓபன் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-டிவிஜ் சரண் இணை பங்கேற்கிறது.
டாடா ஓபன் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-டிவிஜ் சரண் இணை பங்கேற்கிறது.
வரும் 31-ஆம் தேதி புணேயில் தொடங்கும் இப்போட்டியின் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் போபண்ணா-டிவிஜ் சரண் இணைக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தா ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற இந்த இணை 2020 டோக்கியா ஒலிம்பிக் போட்டியை இலக்காக கொண்டுள்ளது. டாடா ஓபன் போட்டியில் இருந்து தற்போது இணைந்து ஆட உள்ளனர். மூத்த வீரர் லியாண்டர் பயஸ், மெக்ஸிகோவின் மிகுல் ரெயஸ் உடன் இணைந்து ஆடுகிறார்.
அதே நேரத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 6-ஆம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சன், 7-ஆம் நிலை வீரர் மரின் சிலிக், நடப்பு சாம்பியன் கில்ஸ் சைமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.