இந்திய வாலிபால்அணியில் கோபி கல்லூரி மாணவி
கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி இளநிலை முதலாம் ஆண்டு மாணவி எஸ்.ஷாலினி இந்திய மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி இளநிலை முதலாம் ஆண்டு மாணவி எஸ்.ஷாலினி இந்திய மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
19ஆவதுஆசிய மகளிர் வாலிபால் போட்டிகள் வியட்நாமில் ஜூன்10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
19 வயதுக்குள்பட்ட இந்திய மகளிர் கையுந்துப் பந்து (வாலிபால்) அணியில் விளையாடுவதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி எஸ்.ஷாலினியை கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பி.என்.வெங்கடாசலம், கல்லூரி துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, உடல்கல்வி இயக்குநர் பேராசிரியை ஜமுனாமணி, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.