உலகக் கோப்பை போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தல்
ரஷியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2018 போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரஷியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2018 போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்புடைய இணையதளங்களில் பிரபல கால்பந்து வீரர்கள் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் வழக்கமாக பிணைக்கைதிகள் கொல்லப்படுவதற்கு முன் அணியும் ஆரஞ்சு நிற உடைகளுடன் இருப்பது போன்ற படங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளின் போது தாக்குதல் நடத்தும் திறன் அந்த அமைப்புக்கு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.