19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் சீசனில் 18 விக்கெட்டுகளை அர்ஜுன் வீழ்த்தியுள்ளார். இலங்கையில் இரண்டு 4 நாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
19 வயது நிறைவடைந்தவர்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் சேர்க்கக் கூடாது என பிசிசிஐயும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் உறுதியாக உள்ளனர். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் இந்திய அணியில் டெண்டுல்கர் ஜூனியர் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.