மலேசிய ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி உள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி உள்ளார்.
தொடக்க சுற்று ஆட்டத்தில் சாய்னா 21-12, 21-16 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஐப் பியு யின்னை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 42 நிமிடங்களில் சாய்னா இந்த வெற்றியை பெற்றார். கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ள சாய்னா அடுத்த ஆட்டத்தின் ஜப்பானின் அகேன் எமகாச்சியை சந்திக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.