தில்லி அணி உடலுறுப்பு தானம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தில்லி டேர்டெவில்ஸ் அணியினர் அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வதற்காக புதன்கிழமை உறுதியேற்றுக் கொண்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தில்லி டேர்டெவில்ஸ் அணியினர் அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வதற்காக புதன்கிழமை உறுதியேற்றுக் கொண்டனர்.
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படும் முயற்சியாக கெளதம் கம்பீர், முகமது ஷமி, பிருத்வி ஷா உள்ளிட்ட அந்த அணியின் அனைத்து வீரர்களும் இந்த தானத்தில் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து கெளதம் கம்பீர் கூறுகையில், 'ஒவ்வொருவருமே உடலுறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் ஏற்கெனவே உடலுறுப்பு தானத்தில் இணைந்துள்ளேன்.
பிறருக்கு உதவுவதன் மூலமாக, இறப்புக்குப் பிறகும் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற இயலும். உறுப்பு தானத்தின் மூலமாக நமது வாழ்க்கை முடிந்த பிறகு, பிறரின் வாழ்க்கை தொடர உதவ இயலும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.