FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்: ஷுப்மன்கில் அபாரம்

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வலுவான நிலையில் உள்ளது.

31 ஜனவரி 2024, 3:37 pm IST
பகிர்:


இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வலுவான நிலையில் உள்ளது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 233/3 ரன்களை எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 92 ரன்களை குவித்தார்.
ஏற்கெனவே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது. 
தொடக்க வீரர் ஷுப்மன் கில் 1 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 92 ரன்களை குவித்து அவுட்டானார். கருண் நாயர் 78 ரன்களுடனும், ரித்திமான் சாஹா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இளம் வீரர் பிரியங்க் பஞ்சால் 31, அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். பின்னர் ஷுப்மன் கில்-கருண் நாயர் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். லுங்கி கிடி, முல்டர், சிபாம்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments