FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய ஏ அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஏ 509 ரன்கள் குவிப்பு

இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 25 நவம்பர் 2021, 11:21 am IST
பிரியங் பஞ்சால்
பகிர்:

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணியில் டெஸ்ட் வீரர் விஹாரி, தமிழக வீரர் பாபா அபரஜித் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் நாளன்று தெ.ஆ. ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. கேப்டன் பீட்டர் மலான் 157 ரன்களுடனும் ஜேசன் ஸ்மித் 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் தெ.ஆ. ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 135.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பீட்டர் மலான் 163 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களில் சைனி, அர்ஸான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Advertisement

Advertisement

இதன்பிறகு விளையாட ஆரம்பித்த இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. பிரியங் பஞ்சால் 45, அபிமயூ ஈஸ்வரன் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments