காமன்வெல்த் போட்டி: நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 5-ஆவது நாளான இன்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நீளம் தாண்டுதல்
Advertisement
Advertisement
நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்த இந்தியாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீஷங்கர் 8.01 மீட்டர் தூரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
குரூப் பி பிரிவில் இடம்பிடித்த மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் சத்யநாதன் முதலில் 7.77 மீட்டர் தூரத்தைத் தாண்டினார். ஆனால், அடுத்தடுத்த முறைகளில் இவர் தகுதி பெறுவதற்கான தூரத்தை தாண்டவில்லை என்றபோதும், முதல்முறை சிறப்பாகத் தாண்டியதால் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார். இறுதிச் சுற்று ஜூலை 29 அன்று நடைபெறவுள்ளது.
நீச்சல்
நீச்சல் போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஆடவர் 200 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சலில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் பங்கேற்றார். முதல் 100 மீட்டர் தூரம் வரை முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் சற்றே பின் தங்கினார். முடிவில் பந்தய தூரத்தை 1:58.59 என்ற நேரத்தில் கடந்து இரண்டாம் இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். இறுதிச்சுற்று இன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.
Commonwealth Games: India advances to the finals in swimming and long jump!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.