முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: முக்கியமான ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு

செஸ் ஒலிம்பியாடில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஆர்மீனியாவுக்கு எதிரான 6-வது சுற்றில் இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியா பி, ஆர்மீனியா அணிகள் மட்டுமே இதுவரை தோல்வியடையாமல் உள்ளன. இரு அணிகளும் 5 ஆட்டங்களில் 10 புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களில் உள்ளன.

இன்று நடைபெறும் 6-வது சுற்றில் இந்தியா பி அணியும் ஆர்மீனியாவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்திய பி வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆர்மீனியாவுக்கு எதிராக குகேஷ், நிஹல் சரின், அதிபன், ருனாக் சத்வனி ஆகியோர் விளையாடுகிறார்கள். 

சென்னை செஸ் ஒலிம்பியாடில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என ஓரளவு நன்றாகவே விளையாடியுள்ளார். எனினும் அவருடைய திறமைக்கு அவர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →