செஸ் ஒலிம்பியாட்: முக்கியமான ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு
செஸ் ஒலிம்பியாடில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என...
சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஆர்மீனியாவுக்கு எதிரான 6-வது சுற்றில் இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியா பி, ஆர்மீனியா அணிகள் மட்டுமே இதுவரை தோல்வியடையாமல் உள்ளன. இரு அணிகளும் 5 ஆட்டங்களில் 10 புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களில் உள்ளன.
இன்று நடைபெறும் 6-வது சுற்றில் இந்தியா பி அணியும் ஆர்மீனியாவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்திய பி வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆர்மீனியாவுக்கு எதிராக குகேஷ், நிஹல் சரின், அதிபன், ருனாக் சத்வனி ஆகியோர் விளையாடுகிறார்கள்.
சென்னை செஸ் ஒலிம்பியாடில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என ஓரளவு நன்றாகவே விளையாடியுள்ளார். எனினும் அவருடைய திறமைக்கு அவர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Article
இந்திய டி20 அணியில் அஸ்வினா?: கேள்வி எழுப்பும் ஸ்ரீகாந்த்
தமிழகத்தின் 16 வயது குகேஷ்: இந்தியாவின் நெ.3 செஸ் வீரர்!
சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: அறிவிப்பு
டிக்கெட் விற்பனை: ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட்
ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தான் அணி அறிவிப்பு, பிரபல வீரர் நீக்கம்!
காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங்: 3-வது டி20யில் இந்தியா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)