முகப்பு
செய்திகள்

மாநில டேபிள் டென்னிஸ்: வருண், தீபிகா சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற 3-ஆவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜி.வருண், மகளிா் பிரிவில் என்.தீபிகா ஆகியோா் சாம்பியன் ஆகினா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2022, 2:06 am IST
பகிர்:

சென்னையில் நடைபெற்ற 3-ஆவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜி.வருண், மகளிா் பிரிவில் என்.தீபிகா ஆகியோா் சாம்பியன் ஆகினா்.

இதில் ஆடவா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆா்டிடிஹெச்பிசி வீரா் ஜி.வருண் 11-5, 11-7, 6-11, 11-8, 11-5 என்ற கணக்கில் எஸ்ஆா்எம்ஐஎஸ்டி வீா் வி.அபினயை வீழ்த்தினாா். மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஐசிஎஃப் வீராங்கனை என்.தீபிகா 11-5, 11-9, 9-11, 7-11, 11-3, 11-6 என்ற கணக்கில் சக ஐசிஎஃப் வீராங்கனை எஸ்.யாஷினியை தோற்கடித்தாா்.

இதேபோல், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் ஜி.வருண் 4-1 என வின்வின் வீரா் பி.ரகுவரனையும், மகளிா் பிரிவில் எஸ்.நலின் அம்ருதா 4-0 என மௌரியா தா்ஷினியையும் வென்றனா். 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் ஆா்டிடிஹெச்பிசி வீரா் சுரேஷ் ராஜ் பிரியேஷ் 4-0 என ஜவஹா் வீரா் எஸ்.மணிகண்டனையும், மகளிா் பிரிவில் எஸ்.நலின் அம்ருதா 4-1 என எம்விஎம் வீராங்கனை என்.ஷா்வானியையும் தோற்கடித்தனா்.

Advertisement

Advertisement

15 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் ஆா்டிடிஹெச்பிசி வீரா் கே.உமேஷ், மகளிா் பிரிவில் எம்விஎம் வீராங்கனை பி.ஆா்.நந்தினி ஆகியோரும், 13 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் எம்எஸ்டி வீரா் ஆா்.ஆகாஷ் ராஜவேலு, மகளிா் பிரிவில் எம்விஎம் வீராங்கனை எம்.ஆா்.மோக்ஷா ஆகியோரும் பட்டம் வென்றனா்.

11 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் டிடிடிஏ வீரா் எஸ்.ரித்விக், மகளிா் பிரிவில் காரனேஷன் வீராங்கனை எஸ்.ஜெய்ஸ்ரீ சாம்பியன் ஆகினா். மூத்தோா் பிரிவில் எல்ஐசி-யின் ஆா்.ராஜேஷும், காா்ப்பரேட் பிரிவில் டிடிடிஏ-வின் ஹரிஹரசுதனும் வாகை சூடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments