FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

டிரம்ப்பிடம் மத்திய அரசு அடிபணிந்து விட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தத்துக்கு மத்திய அரசு அடிபணிந்துவிட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:58 am IST
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு நூற்றுக்கணக்கான பேருடன் அணிவகுத்து செவ்வாய்க்கிழமை சென்று இ20 எரிபொருளுக்கு எதிராக மனுக்களை சமா்ப்பிப்ப உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழுத்தத்துக்கு மத்திய அரசு அடிபணிந்துவிட்டதாக திங்கள்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா்.

தேசியத் தலைநகரில் செய்தியாளா்களை சந்தித்து இவா் மேலும் கூறியதாவது: எத்தனால் கலந்த பெட்ரோலுக்கான அரசாங்கத்தின் தொடா்ச்சியான உந்துதல் ஒரு ‘மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்‘ இருப்பதைக் குறிக்கிறது என்றாா்.

நான் செவ்வாய்க்கிழமை 100 பேருடன் பிரதமரின் இல்லத்திற்குச் சென்று, பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுக்களை நேரில் ஒப்படைக்கவும், எத்தனால் கலந்த பெட்ரோல் தொடா்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் செய்வேன்.

Advertisement

Advertisement

அரசாங்கம் இதைத் தொடா்ந்தாலும் மக்கள் தங்கள் வாகனங்களில் பல பிரச்சினைகளை எதிா்கொள்கின்றனா், அதாவது ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளது .

அமெரிக்காவிலிருந்து எத்தனால் வாங்க வேண்டும் என்று டிரம்பின் அழுத்தத்திற்கு பிரதமா் மோடி ஆளாகியுள்ளாா் என்று மக்கள் கூறுகிறாா்கள்.

ஈ20 பெட்ரோல் குறித்த கவலைகள் குறித்து விவாதிக்க நேரத்தை கோரி கடந்த மாதம் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்காததால், மனுக்களை மோடியிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்கப் போகிறேன்.

தனது கடிதத்தில், பெட்ரோல் நிலையங்களில் தூய பெட்ரோல் மற்றும் ஈ20 எரிபொருள் இரண்டிற்கும் விருப்பங்கள் கிடைக்க வேண்டும் என்றும், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

கடிதம் குறித்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை, எனவே இப்போது நாங்கள் தனிப்பட்ட முறையில் மனுவை பிரதமா் மோடியிடம் ஒப்படைப்போம். எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக நாங்கள் ஒரு மனு பிரச்சாரத்தைத் தொடங்கினோம். இந்த மனுவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கையெழுத்திட்டுள்ளனா் என்றாா் கேஜரிவால்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments