FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நீரஜ் சோப்ரா அடுத்து பங்கேற்கும் போட்டி அறிவிப்பு

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார்.

Updated On : 24 ஆகஸ்ட் 2022, 1:58 pm IST
பகிர்:

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் ஆகஸ்ட் 26 அன்று ஸ்விட்சர்லாந்தின் லுசானேவில் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சில் செப்டம்பர் 7-8 தேதிகளில் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். நீரஜ் சோப்ரா தற்போது 4-ம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு ஸ்டாக்ஹோம் டையமண்ட் லீக் போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். 

Advertisement

Advertisement

இதுவரை எல்லா முக்கியப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளதால் டையமண்ட் லீக் போட்டியிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என நீரஜ் சோப்ரா சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments