ஆசியக் கோப்பை: இந்திய அணியின் புதிய விடியோவை வெளியிட்ட பிசிசிஐ
ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான புதிய விடியோவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான புதிய விடியோவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். 2022 போல 2016-ல் ஆசியக் கோப்பைப் போட்டி டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு டி20 போட்டியாக நடைபெற்றது. அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டி 50 ஓவர் போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Advertisement
Advertisement
இந்திய அணியினர் அனைவரும் துபைக்குச் சென்று பயிற்சியெடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தேர்வாகியுள்ளார்.
இன்று இந்திய அணி வீரர்களின் போட்டோஷுட் நிகழ்வு நடைபெற்றது. இதன் காணொளியை பிசிசிஐ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.