முகப்பு
செய்திகள்

நூலிழையில் தோற்ற அயர்லாந்து: பிரேஸ்வெலின் சதத்தால் தப்பிப் பிழைத்த நியூசிலாந்து

2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை அளித்து...

Updated On : 11 ஜூலை 2022, 12:08 pm IST
பகிர்:

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணி அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டப்லினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அயர்லாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. ஹேரி டெக்டர் 113 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Advertisement

Advertisement

நியூசிலாந்து அணி, 29.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களுடன் தடுமாறியது. 7-ம் நிலை வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல், அபாரமாக  விளையாடி சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தார். 74 பந்துகளில் சதமடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை அளித்து ஆட்ட நாயகன் விருதை பிரேஸ்வெல் வென்றார். அவர் 82 பந்துகளில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது ஓவரில் இதுவரை எந்த ஒரு அணியும் 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதில்லை. நியூசிலாந்து அணி முதல்முறையாக இதை நிகழ்த்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments