’அந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை’: ஆத்திரமடைந்த யோகி பாபு
விரைவில் வெளியாகவுள்ள புதிய படத்தின் தான் நாயகனாக நடிக்கவில்லை என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள புதிய படத்தின் தான் நாயகனாக நடிக்கவில்லை என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்தர நடிகராகவும் பிசியாக இருப்பவர் நடிகர் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் என உச்சநட்சத்திரங்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘தாதா’ படத்தின் புரோமோஷன்களில் யோகிபாபுவை நாயகனாக சித்தரித்து போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!
அதனைப் பகிர்ந்த யோகிபாபு “இந்தப் படத்தில் நான் நாயகனாக நடிக்கவில்லை. நிதின் சத்யாதான் ஹீரோ. நான் அவரின் நண்பராக நடித்திருக்கிறேன். நான் ஹீரோ இல்லை. நம்பாதீங்க மக்களே” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.