FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மெஸ்ஸிக்கு 100-ஆவது சர்வதேச வெற்றி

ஜமைக்காவுக்கு எதிரான நட்பு கால்பந்து ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா வென்றது. இதில் 2 கோல்கள் அடித்த கேப்டன் மெஸ்ஸிக்கு 100-ஆவது சர்வதேச வெற்றியாகவும் அமைந்தது.

1 பிப்ரவரி 2024, 3:57 pm IST
பகிர்:

ஜமைக்காவுக்கு எதிரான நட்பு கால்பந்து ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா வென்றது. இதில் 2 கோல்கள் அடித்த கேப்டன் மெஸ்ஸிக்கு 100-ஆவது சர்வதேச வெற்றியாகவும் அமைந்தது.
 கத்தாரில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பல்வேறு நாடுகள் நட்பு ஆட்டங்களில் ஆடி வருகின்றன. நியூ ஜெர்ஸியில் செவ்வாய்க்கிழமை இரவு ஜமைக்காவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா மோதியது. முதலில் 56-ஆவது நிமிஷத்தில் லாட்ரோ மார்ட்டினஸ் முதல் கோலை அடித்தார்.
 பின்னர் 86-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார். தொடர்ந்து ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் இரண்டாவது மற்றும் வெற்றி கோலை அடித்தார் மெஸ்ஸி.
 100-ஆவது சர்வதேச வெற்றி: கேப்டன் மெஸ்ஸிக்கு இது 100-ஆவது சர்வதேச வெற்றியாக அமைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோண்டுராஸ் அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்திலும் மெஸ்ஸி 2 கோல்களை அடித்திருந்தார். 164 ஆட்டங்களில் மெஸ்ஸி அடித்த 90-ஆவது கோலாகும்.
 13-ஆவது முறையாக நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள ஆர்ஜென்டீனா அணி கத்தாரில் பட்டம் வெல்லும் அணிகளில் முக்கியமாக கருதப்படுகிறது.
 பிரேசில் அபார வெற்றி: பாரிஸில் நடைபெற்ற துனிசியா-பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி கண்டது.
 ரபிஹின்ஹா இரண்டு கோல்களையும், நெய்மர், பெட்ரோ, ரிச்சரிலிஸன் ஆகியோர் தலா 1 கோலையும் அடித்தனர். கோல்களைக் பிரேசில் வீரர்கள் கொண்டாடிய போது, ரசிகர்கள் வாழைப்பழத் தோலை வீசினர். இதற்கு பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.
 ஈக்குவடார்-ஜப்பான், அமெரிக்கா-சவுதி அரேபியா ஆட்டங்கள் 0-0 என டிரான ஆனது. உருகுவே 2-0 என கனடாவை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments