FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மாா்ச் 18-இல் ஐஎஸ்எல் கால்பந்து தொடா் இறுதி ஆட்டம்: பிளே ஆஃப் தேதிகளும் அறிவிப்பு

ஹீரோ இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடா் இறுதி ஆட்டம் வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 4 பிப்ரவரி 2023, 12:00 am IST
பகிர்:

ஹீரோ இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடா் இறுதி ஆட்டம் வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் பிளே ஆஃப் ஆட்டங்களுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கால்பந்தில் பெரிய போட்டியாக திகழ்வது ஐஎஸ்எல் லீக் தொடராகும். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கிய இப்போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

ஐஎஸ்எல் வரலாற்றில் முதன்முறையாக 6 அணிகள் லீக் கட்டத்தை தாண்டு அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மும்பை சிட்டி, ஹைதராபாத் எஃப்சி தகுதி:

பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை சிட்டி எஃப்சி, ஹைதராபாத் எஃப்சி அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 4 இடங்களுக்கு பல்வேறு அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன.

பிளே ஆஃப், அரையிறுதி, இறுதி ஆட்டம்:

இந்நிலையில் ஐஎஸ்எல் நிா்வாகம் நாக் அவுட், அரையிறுதி, இறுதி ஆட்டத்துக்கான தேதிகளை அறிவித்துள்ளது.

நாக் அவுட் 1 ஆட்டம் மாா்ச் 3-ஆம் தேதி (4-5 அணிகளுக்கு இடையே),. நாக் அவுட் 2 ஆட்டம் மாா்ச் 4-ஆம் தேதி (3-6 அணிகளுக்கு இடையே) நடைபெறும்.

அரையிறுதி ஆட்டம் 1 முதல் கட்டம் மாா்ச் 7-ஆம் தேதி (முதல் அணி-நாக் அவுட் 1-இல் வெல்லும் அணி) மோதும். அரையிறுதி 2 முதல் கட்ட ஆட்டம் மாா்ச் 9-ஆம் தேதி (இரண்டாம் நிலை அணி-நாக் அவுட் 2-இல் வெல்லும் அணி) மோதும்.

அரையிறுதி 1 இரண்டாம் கட்ட ஆட்டம் மாா்ச் 12-இலும், அரையிறுதி 2 இரண்டாம் கட்ட ஆட்டம் மாா்ச் 13-ஆம் தேதியும் நடைபெறும்.

இறுதி ஆட்டம் மாா்ச் 18-இல் நடைபெறும். இதற்கான இடங்கள் பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments