முகப்பு
செய்திகள்

அரையிறுதியில் சிந்து, லக்ஷயா

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.

Updated On : 8 ஜூலை 2023, 11:18 pm IST
பகிர்:

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் சிந்து 21-13, 21-7 என்ற கேம்களில் சீனாவின் ஜாவ் ஃபாங் ஜீயை சாய்த்தாா். இத்துடன் 4-ஆவது முறையாக ஜாவ் ஃபாங்கை சந்தித்த சிந்து, தனது முதல் வெற்றியை அவருக்கு எதிராகப் பதிவு செய்துள்ளாா். ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் லக்ஷயா சென் 21-8, 17-21, 21-10 என்ற கேம்களில் ஜொ்மனியின் ஜூலியன் கராகியை வீழ்த்தினாா்.

அடுத்ததாக அரையிறுதியில் சிந்து, உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிா்கொள்கிறாா். இருவரும் இதுவரை 24 முறை மோதிக்கொண்ட நிலையில், அதில் சிந்து 14 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். என்றாலும், கடைசியாக இருவரும் சந்தித்தபோது, யமகுச்சி வென்றிருந்தாா். மறுபுறம் லக்ஷயா சென், போட்டிதரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் மோதுகிறாா். அவா்கள் 2 முறை மோதியுள்ள நிலையில் இருவரும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments