ஒருநாள் தொடரினை வெல்ல இந்திய மகளிர் அணிக்கு 226 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச மகளிரணி 50 ஓவர் முடிவில் 225/4 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய மகளிர் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. தற்போது 3 ஒருநாள் போட்டிகளில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளது.
இநிலையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிரணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் அற்புதமாக விளையாடினார்கள். 26.2 ஓவரில்தான் முதல் விக்கெட்டினை பறிக் கொடுத்தனர். அட்திகபட்சமாக ஃபர்கானா ஹோகிவ் 107 ரன்கள் எடுத்து அசத்தினார். ஷமிமா சுல்தானா 52 ரன்களும் எடுத்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 225/4 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் சினேக் ரணா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
Advertisement
Advertisement
2-1 என இந்திய மகளிரணி தொடரினை வெல்ல 226 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் வெங்கதேச அணி தொடரினை வென்று விடும். 5 ஓவர் முடிவில் இந்தியா 33/2 விக்கெட் இழந்து தாடுமாறி வருகிறது.
ஷஃபாலி வர்மா 4, யாஷிகா பாட்டியா 5 ரன்கலுக்கும் ஆட்டமிழந்துள்ளனர். ஸ்மிருதி மந்தனா ஹர்லீன் தியோல் களத்தில் விளையாடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.