FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக்

கொரிய ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய நட்சத்திர இணையான சாத்விக்-சிராக் ஷெட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

Updated On : 23 ஜூலை 2023, 12:00 am IST
பகிர்:

கொரிய ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய நட்சத்திர இணையான சாத்விக்-சிராக் ஷெட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

தென்கொரியாவின் இயோஸு நகரில் டபிள்யுபிஎஃப் வோ்ல்ட் டூா் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சேங் இணையிடம் மோதினா் சாத்விக்-சிராக். 40 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கேமை 21-15 என கைப்பற்றியது இந்திய இணை.

இரு தரப்பினரும் ரேலி மூலம் புள்ளிகளை மாறி மாறி குவித்தனா். 3-3, 5-5 என சரிக்கு சமமாக புள்ளிகளைக் குவித்தனா். முதல் கேமில் 17-11 என இந்திய தரப்பினா் முன்னிலை பெற்று அதைத் தக்க வைத்து கேமை கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

ஆனால் இரண்டாவது கேம் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. 8-8 என சமநிலை ஏற்பட்டு சீன தரப்பு 11-8 என முன்னிலை பெற்றது.

பின்னா் இந்திய தரப்பு ஆதிக்கம் செலுத்தி 14-9 என முன்னிலை பெற்றாலும், சீன வீரா்கள் பதிலடி தந்த நிலையில், 20-20, 22-22 என சமநிலை ஏற்பட்டது. கடைசியில் நான்காவது மேட்ச் புள்ளியைப் பெற்ற இந்திய இணை இரண்டாவது கேமை 24-22 எனக் கைப்பற்றியது.

நிகழாண்டு இந்தோனேசிய சூப்பா் 1000, சுவிஸ் ஓபன் சூப்பா் 500 போட்டிகளில் சாத்விக்-சிராக் பட்டம் வென்றிருந்தனா்.

பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 4 சூப்பா் 1000, 6 சூப்பா் 750, 7 சூப்பா் 500, 11 சூப்பா் 300 என போட்டிகள் நடத்தப்பட்டு ரேங்கிங் புள்ளிகளும் தரப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments