FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சாண்ட்னரின் சிஎஸ்கே அனுபவம் எங்கள் வெற்றிக்கு உதவும்: நியூசிலாந்து கேப்டன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

Updated On : 21 அக்டோபர் 2023, 7:55 pm IST
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் இதுவரை நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் நியூசிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி நாளை (அக்டோபர் 22) தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியை  எதிர்கொள்கிறது. 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பல ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை மிட்செல் சாண்ட்னர் வழங்கி வருகிறார். இந்திய ஆடுகளங்களில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவருக்கு இந்திய ஆடுகளங்களின்  தன்மை குறித்து அனுபவம் இருக்கும். அவர் சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார். அதனால் இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப அவர் தன்னை எளிதில் மாற்றிக் கொள்வார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளார். நாளைய போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.  

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னர் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments