முகப்பு
செய்திகள்

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் அவனி!

பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப் பதக்கம் வென்றார். 

Updated On : 23 அக்டோபர் 2023, 4:52 pm IST
அவனி லேகாரா
பகிர்:

பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப் பதக்கம் வென்றார். 

சீனாவில் அக்.22ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாவது நாளான இன்று (அக். 23) துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லேகாரா பங்கேற்றார். இவர் 249.6 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றதோடு, பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ருத்ரனேஷ் கந்தேல்வால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Advertisement

Advertisement

இதேபோன்று உயரம் தாண்டுதல் பிரிவில் 1.82 மீட்டர் தூரம் தாண்டி இந்தியாவின் ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். நீளம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் 2.02 மீட்டர் தூரத்திற்கு நீளம் தாண்டி தங்கம் வென்றார். 

ஆண்களுக்கான 5000 மீட்டர்-டி11 பிரிவில் அங்கூர் தாமா இந்தியாவுக்கு ஐந்தாவது தங்கப் பதக்கத்தை வென்றார். தற்போதுவரை இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments