யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார்! அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில்!
பேரவையில் அமைச்சர் வினோத் கூறியதற்கு ஓ. பன்னீர்செல்வம் பதில்...
முதல்வர் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது என்று அமைச்சர் வினோத் கூறியதற்கு ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று பேரவையில் வேளாண் துறை பட்ஜெட் மீது பதிலுரை அளித்தார். வேளாண் பட்ஜெட்டை விவசாயிகள் வரவேற்கிறார்கள் என்றும் சிலர் தூண்டுதலின் பேரில் வேளாண் பட்ஜெட்டை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வரும் காலங்களில் நீங்கள் மாற்றத்தை உணர முடியும் என்றும் தெரிவித்தார்.
அப்போது, எங்கள் முதல்வர் யார் தெரியுமா? என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டியபோது இறுதியாக, "அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் (முதல்வர் விஜய்) வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது" என்று கூறினார்.
Advertisement
Advertisement
அப்போது முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ. பன்னீர்செல்வம், "இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார் என்பதைக் கூறிக்கொள்கிறேன். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சித்தும் சூரியனுக்கு ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்" என்றார்.
Agriculture minister vinoth vs DMK MLA O panneerselvam in TN Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.