ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும்...! அமைச்சர் வினோத்
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது பற்றி...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 5) நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், "ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும் விவசாயிகளின் நலனை அக்கறை கொண்டுள்ளது நம் அரசு. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ. 134.84 கோடி குறுவை தொகுப்பு திட்டம் வழங்கினார்.
Advertisement
Advertisement
8.26 ஏக்கர் பரப்பரளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை நிலங்கள் 100% பயிர்க் காப்பீடு கொண்டு வரப்படும்.
ஒரு கோடி விவசாயிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மண்வள அட்டைகள் வழங்கப்படும். மண்வளத்தைப் பாதுகாக்க லட்சம் ஏக்கருக்கு பசுந்தாள் உரம் வழங்கப்படும்.
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு பயிர்க்காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.
TN Agriculture budget 2026: minister vinoth speaks about mettur dam open
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.