FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மோடி, அமித் ஷா பெயரில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம்!

சச்சின், தோனி உள்ளிட்டோர் பெயர்களிலும் போலி விண்ணப்பங்கள்...

Updated On : 28 மே 2024, 11:35 am IST
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் போலியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகின்றது. ரிக்கி பாண்டிங்கை பிசிசிஐ அணுகியதாக தகவல் வெளியான நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், கெளதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, கூகுள் விண்ணப்பங்கள் மூலம் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று மே 13-ஆம் தேதி பிசிசிஐ தெரிவித்திருந்தது.

நேற்றுடன்(மே 27) விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 3,000-க்கும் அதிகமானோர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதில், பிரதமர் மோடி, அமித் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களில் போலியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 சர்வதேச ஒருநாள் போட்டிகள் அல்லது தேசிய அணிக்காக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் விளையாடியிருக்க வேண்டும்.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இ-மெயில் மூலம் பிசிசிஐ விண்ணப்பம் கோரிய நிலையில், 5,000 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments