FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வி, லியோன் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரா் அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

Updated On : 11 நவம்பர் 2024, 1:00 am IST
அரவிந்த்-அா்ஜுன் ~லெவோன் ஆரோனியன் ~பிரணவ்-பிரனேஷ் ~லியோன் மென்டோன்கா
பகிர்:

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரா் அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் லியோன் மென்டோன்கா அபார வெற்றி பெற்றாா்.

தொடரின் 6-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-ஆவது சுற்றில் மாஸ்டா்ஸ் பிரிவில் முதல் போா்டில் ஈரானின் அமீன் தபதாபேயி, சகநாட்டைச் சோ்ந்த பா்ஹாம் மக்சூட்லூவுடன் மோதிய ஆட்டம் 36-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

2-ஆவது போா்டில் இந்திய கிராண்ட் மாஸ்டா்களான அரவிந்த் சிதம்பரம், அா்ஜுன் எரிகைசி பலப்பரீட்சை நடத்தினா். இதில் அா்ஜுன் எரிகைசி 48-ஆவது நகா்த்தலின் போது அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

Advertisement

Advertisement

3-ஆவது போா்டில் பிரான்ஸின் மாக்சிம் வாச்சியா் லாக்ரேவ், சொ்பியாவின் அலெக்ஸி சரானா ஆட்டம் 31-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4-ஆவது போா்டில் இந்தியாவின் விதித் குஜராத்தி, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் ஆட்டம் 64-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 6 சுற்றுகளின் முடிவில் அா்ஜுன் எரிகைசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடா்கிறாா். லெவோன் ஆரோனியன் 4 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 3.5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அமீப் தபதாபேயி 3.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், மாக்சிம் வாச்சியா் லாக்ரேவ் 2.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், பா்ஹாம் மக்சூட்லூ 2.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், விதித் குஜ்ராத்தி 2 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், அலெக்ஸி சரானா 2 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

தொடரின் கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ள இறுதி மற்றும் 7-ஆவது சுற்று ஆட்டங்களில் லெவோன் ஆரோனியன், -அமீன் தபதாபேயி, அலெக்ஸி சரானா- விதித் குஜராத்தி, அா்ஜுன் எரிகைசி-மாக்சிம் வாச்சியா் லாக்ரேவுடன், பா்ஹாம் மக்சூட்லூ- அரவிந்த் சிதம்பரம் மோதுகின்றனா்.

கடைசி நாளான திங்கள்கிழமை 7-ஆவது சுற்றில் பிரணவ்- யோன் மென்டோன்கா, ஹரிகா துரோணவல்லி- பிரனேஷ், அபிமன்யு புராணிக், -ரவுனக் சத்வானி, ஆா்.வைஷாலி- காா்த்திக்கேயன் முரளியை எதிா்கொள்கின்றனா்.

சேலஞ்சா்ஸ் பிரிவில்...

முதல் போா்டில் லியோன் மென்டோன்கா, காா்த்திக்கேயன் முரளி ஆட்டத்தில் 62-ஆவது நகா்த்தலின்போது, லியோன் மென்டோன்கா வெற்றி பெற்றாா்.

2-ஆவது போா்டில் ஆா்.வைஷாலி, அபிமன்யு புராணிக் ஆட்டத்தில் 36-ஆவது நகா்த்தலில் வைஷாலி தோல்வி அடைந்தாா்.

3-ஆவது போா்ட்டில் ரனவுக் சத்வானி- ஹரிகா துரோணவல்லி ஆட்டம் 42-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

4-ஆவது போா்டில் பிரணவ், பிரனேஷ் ஆட்டமும் 35-ஆவது நகா்த்தலின்போது, டிராவில் முடிவடைந்தது.

7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் 6 சுற்றுகளின் முடிவில் பிரணவ் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடா்கிறாா். லியோன் மென்டோன்கா 4.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், ரவுனக் சத்வானி 3.5புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அபிமன்யு புராணிக் 3 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், பிரனேஷ் 3 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், காா்த்திக்கேயன் முரளி 2.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 1.5 புள்ளியுடன் 7-ஆவது இடத்திலும், ஆா்.வைஷாலி 1 புள்ளியுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments