FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய துப்பாக்கி சுடுதல்: நான்சிக்கு தங்கம், இளவேனிலுக்கு வெள்ளி

ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் நான்சி, இளவேனில் வாலறிவன் முறையே தங்கம், வெள்ளி பதக்கங்கள் புதன்கிழமை வென்றனர். 

7 பிப்ரவரி 2024, 8:51 pm IST
பகிர்:

ஜகார்த்தா: ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் நான்சி, இளவேனில் வாலறிவன் முறையே தங்கம், வெள்ளி பதக்கங்கள் புதன்கிழமை வென்றனர். 

10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் தனிநபர் இறுதிச்சுற்றில், நான்சி 252.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, இளவேனில் 252.7 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றார். சீனாவின் ஷென் யுஃபான் 3}ஆம் இடம் பிடிக்க, இந்தியாவின் மெஹுலி கோஷ் 210 புள்ளிகள் பெற்று நூலிழையில் வெண்கலப் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 
என்றாலும், இதிலேயே மகளிர் அணிகள் பிரிவில் நான்சி, இளவேனில், மெஹுலி கூட்டணி தங்கம் வென்று அசத்தியது. 
10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் தனிநபர் பிரிவில் ருத்ராங்க்ஷ் பாட்டீல் 228.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் மா சிஹான், தென் கொரியாவின் டேஹன் கோ முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனர். மற்றொரு இந்தியரான அர்ஜுன் பபுதா இப்பிரிவில் 6}ஆம் இடம் பிடித்தார். 
ஆடவர் அணிகள் பிரிவில் ருத்ராங்க்ஷ், அர்ஜுன், ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் பெற்றது. 
ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இஷா தக்சேல் (253.1), கியாத்தி செளதரி (251.2), அன்வி ரத்தோட் (227.7) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்து பதக்கம் வென்றனர். 
இதையடுத்து, புதன்கிழமை முடிவில் இந்தியா 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments