FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரையிறுதியில் சாத்விக் / சிராக் இணை

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

7 பிப்ரவரி 2024, 8:50 pm IST
பகிர்:

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக்/சிராக், ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், 21-11, 21-8 என்ற கேம்களில் சீனாவின் ஹி ஜீ டிங்/ரென் ஜியாங் யு கூட்டணியை வீழ்த்தினா். இந்த ஆட்டம் 35 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

அடுத்ததாக அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்/சியோ சியுங் ஜே கூட்டணியை எதிா்கொள்கிறது.

Advertisement

Advertisement

எனினும், மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ இணை காலிறுதியில் தோல்வியைத் தழுவியது. உலகின் 24-ஆம் நிலையில் இருக்கும் இந்த இந்திய ஜோடி 15-21, 13-21 என்ற கேம்களில் ஜப்பானின் ரின் இவானகா/கி நகானிஷி இணையிடம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments