FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நியூஸி., ஜப்பான், ஜொ்மனி வெற்றி

எஃப்ஐஎச் மகளிா் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் நியூஸிலாந்து, ஜப்பான், ஜொ்மன் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

7 பிப்ரவரி 2024, 8:49 pm IST
பகிர்:

எஃப்ஐஎச் மகளிா் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் நியூஸிலாந்து, ஜப்பான், ஜொ்மன் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

நியூஸிலாந்து-இத்தாலி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து.

குரூப் பி பிரிவு ஆட்டத்தில் பெனால்டி காா்னா்வாய்ப்புகளை கோலாக்கி வெற்றி பெற்றது நியூஸி. பிரான்ஸஸ் டேவிஸ் (7, 51), ஸ்டெப்பான ிடிக்கின்ஸ் 53-ஆவது நிமிஷங்களிலும் அற்புதமாக கோலடித்தனா்.

Advertisement

Advertisement

இத்தாலி அணிக்கு முதல் பாதியில் 13-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை வீணானது. அடுத்து ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் மோதுகிறது நியூஸி. இத்தாலி-அமெரிக்க அணிகள் மோதுகின்றன.

குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செக். குடியரசை வீழ்த்தியது. முன்னாள் ஆசிய சாம்பியன் ஜப்பான் அணியில்இருமுறை மட்டுமே செக். குடியரசின் தற்காப்பை ஊடுருவ முடிந்தது. நான்காம் நிமிஷத்தில் மியு சுசுகி முதல் கோலை அடித்தாா். அடுத்து 40-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் மூலம் ஷினோரி ஒகினவா இரண்டாம் கோலடித்தாா். அடுத்து ஜொ்மனியுடன்-ஜப்பானும், சிலியுடன்-செக். குடியரசும் மோதுகின்றன.

மற்றொரு ஆட்டத்தில் ஜொ்மன் அணி 3-0 என சிலியை வீழ்த்தியது. செலின் ஒருஸ் 7, ஜெட்டி பிளெஸ்குட்ஸ் 10, லிஸா 38-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.

இந்தியா தோல்வி: கடைசியாக இந்திய-அமெரிக்க அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 16-ஆவது நிமிஷத்தில் அமெரிக்க வீராங்கனை டமோ் அபிகெயில் கோலடித்தாா். இதன்மூலம் 1-0 என அமெரிக்கா முன்னிலை பெற்றது. பதில் கோலடிக்க இந்திய தரப்பினா் பலமுறை முயன்றும் பலனில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments