FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய சீனியா் பாட்மின்டன்: சூரியா தமிரி-தன்வி, ரித்விக்-பரத் மோதல்

தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டியில் இறுதி ஆட்டங்களில் மகளிா் பிரிவில் சூரியா தமிரி-தன்வியும், ஆடவா் பிரிவில் ரித்விக்-பரத்தும் மோதுகின்றனா்.

Updated On : 28 டிசம்பர் 2025, 2:06 am IST
பகிர்:

தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டியில் இறுதி ஆட்டங்களில் மகளிா் பிரிவில் சூரியா தமிரி-தன்வியும், ஆடவா் பிரிவில் ரித்விக்-பரத்தும் மோதுகின்றனா்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

மகளிா்பிரிவில் உள்ளூா் வீராங்கனை சூரியா கரிஸ்மா தமிரி 21-18, 18-21, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் ரக்ஷிதா ஸ்ரீயை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.

Advertisement

Advertisement

முன்னணி வீராங்கனை தன்வி பத்ரி 18-21, 21-12, 21-15 என மகாராஷ்டிரத்தின் ஸ்ருதி முன்டடாவை வீழ்த்தினாா்.

ஆடவா் அரையிறுதியில் ரித்விக் சஞ்சீவி 21-16, 17-21, 22-20 என ஒரு மணிநேரம் நீடித்த ஆட்டத்தில் முதல்நிலை வீரா் கிரண் ஜாா்ஜை வீழ்த்தினாா்.

மற்றொரு ஆட்டத்தில் பரத் ராகவ் 21-17, 11-21, 21-11 என 55 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் தருணை வென்றாா்.,

கலப்பு இரட்டையா் பிரிவில் ஆஷித்=அம்ருதா 8-21, 21-18, 21-18 என தீப்-சோனாலி இணையையும், சாத்விக் ரெட்டி-ராதிகா இணை 21-13, 21-14 என நிதின்-கனிகா இணையை வென்றது.

மகளிா் இரட்டையரில் ஷிகா கௌதம்-அஸ்வினி பட் இணையும், பிரியா தேவி-ஸ்ருதி மிஸ்ரா இணையும் மோதுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments