முகப்பு
செய்திகள்

இந்தியாவின் 91-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 21 வயது வி.எஸ். ராகுல்!

இந்தியாவின் 91 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக வி.எஸ். ராகுல் வெற்றி பெற்றுள்ளது குறித்து...

Updated On : 8 நவம்பர், 2025 at 6:56 AM
இந்தியாவின் 91 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் வி.எஸ். ராகுல்
பகிர்:

இந்தியாவின் 91 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக 21 வயதான வி.எஸ். ராகுல் உருவெடுத்துள்ளார்.

பிலிப்பின்ஸ் நாட்டில், நடைபெற்ற 6 ஆவது தெற்காசிய (ஆசியான்) தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, வி.எஸ். ராகுல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் 91 ஆவது கிராண்ட் மாஸ்டரான வி.எஸ். ராகுலுக்கு பல்வேறு முக்கிய பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இத்துடன், தெற்காசிய தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள வி.எஸ். ராகுலுக்கு இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் நிதின் நாராங், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவின் 90 ஆவது மற்றும் தமிழ்நாட்டின் 35 ஆவது கிராண்ட் மாஸ்டராக, சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம்பரிதி தேர்வானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜெய் ஷா தலையீட்டில் பிரதிகாவுக்கும் பதக்கம்

summary

21-year-old VS Rahul has emerged as India's 91st Chess Grandmaster.

முழு கட்டுரையைப் படிக்க →