FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரக்ஞானந்தா இணை முன்னிலை

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:02 am IST
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் அவருக்கு இது 3-ஆவது வெற்றியாகும்.

இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியரை வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவையும், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டையும் வென்றனா்.

Advertisement

Advertisement

அமெரிக்காவின் சாம் சேவியன் - சக நாட்டவரான வெஸ்லி சோ, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

8 சுற்றுகள் முடிவில், வெஸ்லி சோ மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் இணை முன்னிலை வகிக்கின்றனா். கீமா், சிண்டாரோவ் தலா 4.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.

கரானா, மேக்ஸிம், ஆரோனியன், சேவியன் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் உள்ளனா். அனிஷ் (3.5), ஃபாரீஸ்ட் (1.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments