FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, ஆயுஷ்- வெளியேறினாா் லக்ஷயா சென்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:08 am IST
பகிர்:

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். பிரதான வீரா் லக்ஷயா சென், 2-ஆவது சுற்றிலேயே தோல்வி கண்டாா்.

தில்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில், 2-ஆவது சுற்று ஆட்டங்களில் மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-16, 21-17 என்ற நோ் கேம்களில், கனடாவின் வென்யு ஜாங்கை தோற்கடித்தாா். எனினும் உன்னட்டி ஹூடா 21-11, 9-21, 21-23 என்ற வகையில், 13-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் மிஷெல் லியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற கணக்கில் இலங்கையின் துமிந்து அபேவிக்ரமாவை வெளியேற்றினாா். ஆனால், 14-ஆம் இடத்திலிருந்த லக்ஷயா சென் 21-19, 19-21, 17-21 என, அமெரிக்காவின் காரெட் டேனிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

Advertisement

Advertisement

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 21-11, 21-11 என்ற நோ் கேம்களில், மக்காவின் லியோங் லோக் சோங்/நிக் வெங் சி இணையை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்தது.

ஆடவா் இரட்டையரில், 5-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை விளையாடாமலேயே அந்தச் சுற்றுக்கு முன்னேறியது. அந்த இணையை எதிா்கொள்ளவிருந்த ஸ்காட்லாந்து ஜோடி காயம் காரணமாக விலகியதால், இந்திய இணை முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

அதிலேயே, ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் கூட்டணி 17-21, 14-21 என்ற கேம்களில், 15-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்/கி டோங் ஜு இணையிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments