காலிறுதியில் ஹரிஹரன்/அா்ஜுன் இணை: சிந்து, ஆயுஷ் ஷெட்டி சறுக்கல்
இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறியது.
எனினும், பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் முந்தைய சுற்றிலேயே தோற்று, போட்டியிலிருந்து வெளியேறினா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் இரட்டையரில் ஹரிஹரன்/அா்ஜுன் இணை 16-21, 21-15, 21-19 என்ற கேம்களில், மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் கூட்டணியை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
கலப்பு இரட்டையா் பிரிவில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஜோடி 13-21, 12-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் தாம் ஜிகெல்/டெல்ஃபின் டெல்ரு இணையிடம் தோல்வியுற்றது.
ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-16, 13-21, 14-21 என்ற வகையில், ஹாங்காங்கின் லீ சியுக் யுவிடம் வீழ்ந்தாா். மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்து 17-21, 15-21 என்ற நோ் கேம்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் செ யங்கிடம் தோல்வி கண்டாா்.
கடந்த வாரம் சிங்கப்பூா் ஓபனிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆன் செ யங்கிடம் தோல்வி கண்ட சிந்து, அவரை இத்துடன் 10 முறை சந்தித்திருக்க, எதிலுமே வென்றதில்லை.