கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டு!
கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது பற்றி...
2026 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
கோலகலமாகத் தொடங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தனது சொந்த மண்ணில் விளையாடிய மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.
தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மெக்சிகோ சார்பில் ஜூலியன் குவினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
Advertisement
Advertisement
ஆட்டத்தின் இறுதிவரை ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறியது. இதனால் முதல் போட்டியிலேயே தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்தது மெக்சிகோ அணி.
இந்த நிலையில், உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடக்க ஆட்டத்திலேயே மூன்று ரெட் கார்டுகள் வழங்கபட்டன. விதிகளை மீறியதற்காக தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த ஸ்பெபெலோ சிதோல் மற்றும் தெம்பா ஸ்வானே ஆகியோருக்கு நடுவர் ரெட் கார்டு காட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 9 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது.
மேலும், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மெக்சிகோ வீரர் சீசர் மான்டெஸும் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார். ஆகையால், ரெட் கார்டு பெற்றவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
முன்னதாக 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டியுல் மொத்தமாகவே தலா நான்கு ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.