FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன்: சாத்விக் / சிராக் இணை சாம்பியன்!

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

7 செப்டம்பர் 2026, 4:32 am IST
பகிர்:

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சாத்விக்/சிராக் இணை, 11-21, 21-13, 21-17 என்ற கேம்களில், சீனாவின் ஹி ஜி டிங்/ரென் ஜியாங் யு ஜோடியை வீழ்த்தியது.

1 மணிநேரம், 10 நிமிஷங்களில் நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதல் கேமை இழந்தபோதும், விடாப்பிடியாக விளையாடி அடுத்த இரு கேம்களை கைப்பற்றியது இந்திய இணை. 2-ஆவது கேமில் 45 ஷாட் ரேலியை இந்திய ஜோடி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றில் விளையாடிய இந்திய ஜோடி, முதல்முறையாக வாகை சூடியுள்ளது. 2023, 2025-ஆம் ஆண்டு போட்டிகளில் இவா்கள் கூட்டணி 2-ஆம் இடம் பிடித்தது.

பிடபிள்யூஎஃப் டூா் போட்டிகளில் சாத்விக்/சிராக் இணைக்கு இது 10-ஆவது சாம்பியன் பட்டமாகும். ஏற்கெனவே சிங்கப்பூா் ஓபனில் தங்கம் வென்ற இந்த இந்திய ஜோடிக்கு, நடப்பு சீசனில் இது 2-ஆவது பட்டமாக அமைந்தது.

சாத்விக்/சிராக் கூட்டணி, இம்மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக களம் காண இருக்கும் நிலையில், இந்த வெற்றி அவா்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. சாம்பியனான சாத்விக்/சிராக் இணைக்கு, பரிசுக் கோப்பையுடன் 750 தரவரிசை புள்ளிகளும், ரூ.87.40 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

இதர சாம்பியன்கள்: இப்போட்டியில், மகளிா் ஒற்றையரில் தென் கொரியாவின் ஆன் செ யங், ஆடவா் ஒற்றையரில் ஹாங்காங்கின் ஜேசன் குனவன் ஆகியோா் வெற்றி வாகை சூடினா்.

மகளிா் இரட்டையரில், ஜப்பானின் சுமிரே நகாடே/மியு டகாஹஷி இணையும், கலப்பு இரட்டையரில், சீனாவின் ஃபெங் யான் ஜி/ஹுவாங் டாங் பிங் ஜோடியு கோப்பை வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments