முகப்பு
தமிழ்நாடு

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முந்திரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

புது தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முந்திரி விவசாயிகள் சார்பாக காடாம்புலியூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:18 PM
பகிர்:


பண்ருட்டி:  புது தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முந்திரி விவசாயிகள் சார்பாக காடாம்புலியூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வறட்சி நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும், அனைத்து வங்கிகளிலும் பெற்ற விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

பேரொட்டக் குழுத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலர் சிவகுமார், திமுக ஒன்றிய செயலர் குமார், பாஜக ஒன்றியச் செயலர் மணி உள்ளிட்ட ஏராளமான முந்திரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →