FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதிய வீராணம் திட்டம் பம்பு ஆப்பரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Updated On : 27 ஏப்ரல் 2017, 12:18 pm IST
பகிர்:


பண்ருட்டி: புதிய வீராணம் திட்டத்தில் பணியாற்றும் பம்ப் ஆப்பரேட்டர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை குடிநீர் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் குடிநீர் பம்பு ஆப்பரேட்டர்களை தமிழ்நாடு நிர்ந்தர தகுதி அளிக்கும் சட்டம் 1982ன் படி நிரந்தரப்படுத்த வேண்டும், சென்னைக்குச் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் விதமாக வீராணம் குடிநீர் பம்ப்புகளுக்கு பூட்டு போட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள அடிப்படை ஊதியம், பஞ்சப்படியுடன் இணைந்த குறைந்தசபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும், வருங்கால வைப்பு நிதி, சட்டப்படியான போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.

இது குறித்து சென்னைக் குடிநீர் வழங்கல் வாரிய மேலாண் இயக்குநருக்கு 12.4.2017ல் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

Advertisement

ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் பி. துரை,என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் பொதுச் செயலர் கே. வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments