முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஆகஸ்ட் 2017, 6:19 pm IST
பகிர்:

புதுதில்லி: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவினை  அதிமுகவின் பொதுக் குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரிவினைத் தொடர்ந்து அதிமுக தற்பொழுது அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் தனக்கு என்று ஒரு தனி அணியினை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று கூடி எடுத்துள்ள முடிவின் படி, டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்து செயல்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமயிலான அணியினைச் சேர்ந்த 'அஸ்பயர்;' சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு கடந்த எட்டாம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அளித்த பதிலானது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பதிலானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments