சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த போட்டியில்,
சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர். கண்துடைப்புக்காக விசாரணை கமிஷனை அமைத்துள்ளார் முதல்வர். சிபிஐ விசாரணையே சரியாக இருக்கும். அமைச்சர்கள் மாறி, மாறி பேசி வருவது வேதனையாக இருக்கிறது. யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தெரிவித்திருப்பது அனைவருக்கும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement