FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 11:12 am IST
பகிர்:

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 69. திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ்  கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி போஸின் உயிர் பிரிந்தது. ஏ.கே. போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதுரையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஏ.கே.போஸ் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் திடீர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மூன்று முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்களித்த மக்களுக்காக பணியாற்றிய அவரது மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments