ஓய்வுபெறும் நாளில் டிஆர்பி அதிகாரி பணியிடை நீக்கம்
ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) உறுப்பினர் ராஜராஜேஸ்வரி பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) உறுப்பினர் ராஜராஜேஸ்வரி பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினரான ராஜராஜேஸ்வரி கடந்த 31 -ஆம் தேதியுடன் ஓய்வுபெற இருந்தார். ஆனால், அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜராஜேஸ்வரி கடந்த 2012 -ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இணை இயக்குநராக இருந்தபோது துப்புரவுப் பணியாளர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடவடிக்கைக்கு உள்ளான ராஜராஜேஸ்வரி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பள்ளிக் கல்விக்கான உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.