திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
சென்னையில் இருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி.தினகரன் கூறியது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வைகோ, கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.