இலங்கையில் தமிழக மீனவர்கள் 27 பேருக்கு காவல் நீட்டிப்பு
இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேருக்கு வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேருக்கு வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 27 பேர் கடந்த 11-ஆம் தேதி நான்கு நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையிடம் சிக்கினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களைக் கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை 27 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு மீனவர்களின் நீதிமன்றக் காவலை ஆக. 24 -ஆம் தேதி வரையில் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.