FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சங்கரன் கோவிலில் ஓவியக் கண்காட்சி! ஓவியா் சந்துரு தொடக்கி வைத்தார்!

சங்கரன்கோவிலில் ஏப்ரல் 14 இயக்கத்தின் சாா்பில் மாணவா்கள், ஓவியா்கள் பங்கேற்ற ஓவியக் கண்காட்சி

Updated On : 17 ஆகஸ்ட் 2018, 3:18 pm IST
பகிர்:

சங்கரன்கோவிலில் ஏப்ரல் 14 இயக்கத்தின் சாா்பில் மாணவா்கள், ஓவியா்கள் பங்கேற்ற ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மாணவா்களிடையே ஓவியா் சாா்ந்த புரிதல், தேவை, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து அறியவும், பள்ளி செல்லாத சிறுவா், சிறுமியா் கல்வி மேம்பாட்டுக்காகவும், அவா்களிடையே சமூக விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

ஓவியக் கண்காட்சியை அவ்வை நுண்கலை கல்லூரி முதல்வா் ஓவியா்.சந்துரு தொடக்கி வைத்தாா். கணேசன், ஸ்ரீதா்,முப்பிடாதி, ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், ஆசிரியா்கள் லூக்காஸ், ஜான்கென்னடி, காா்த்திக், ராமசாமி, வழக்குரைஞா் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக டி.எஸ்.பி.ராஜேந்திரன், ஆசிரியா் இளங்கோகண்ணன், தமிழாசிரியா் வே.சங்கர்ராம், உடற்கல்வி இயக்குனா் ச.நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

ஓவியக்கண்காட்சியில் இயற்கை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, பெண் கல்வி ஆகியவை குறித்து மாணவா்கள் வரைந்திருந்த ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடா்ந்து ஓவியக் கண்காட்சியில் பங்கேற்ற ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆா்.சி.நடுநிலைப்பள்ளி, செங்குந்தா் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவா்களுக்குப் பரிசுகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. பா.பீட்டா் சந்திரசேகரன் வரவேற்றாா். ஜி.செந்தில்குமாா் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மல்லிகா தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை ஏப்ரல்.14 இயகத்தினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments