FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கேரளத்துக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணம்: விஜயகாந்த் அறிவிப்பு

கேரளத்துக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தேமுதிக சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:15 pm IST
பகிர்:

கேரளத்துக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தேமுதிக சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஆலுவா, சாலக்குடி, செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  

இதன்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

Advertisement

Advertisement

மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனைத்து மாவட்ட தேமுதிக சார்பில் வரும் 24ஆம் தேதியில் இருந்து அனுப்பப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments