கோவை அருகே யானை தாக்கி ஆதிவாசி சாவு
கோவை அருகே ஆனைகட்டி வனப் பகுதியில் யானை தாக்கியதில் ஆதிவாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெ.நா.பாளையம்: கோவை அருகே ஆனைகட்டி வனப் பகுதியில் யானை தாக்கியதில் ஆதிவாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனைகட்டி அருகே சேம்புக்கரையைச் சேர்ந்தவர் முருகேசன் (41). இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவியும், அருண், சிந்து ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
இவர் தூமனூரில் உள்ள தனது மாமா விக்னேஷை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் சேம்புக்கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வந்த காட்டு யானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவை வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.